சினமூட்டும் நடவடிக்கைகளிலிருந்து அரச பரிபாலனத்தை பாதுகாக்கும் வகையில் 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்துவது எல்லா நிலைகளிலும் பொருத்தமானது என்பதை உறுதி செய்வதற்கு அச்சட்டத்தை ஆரசாங்கம் மீள் ஆய்வு செய்யவிருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் சாயிட் தெரிவித்தார்.
வேறு நோக்கம் எதுவுமின்றி ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கு மட்டும் பிரத்தியேகமாக 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இதனை மீள் ஆய்வு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரத்தை கையாளும் ஒரு நடவடிக்கையாக அமைச்சரவை இம்முடிவை எடுத்துள்ளதாக அஸாலினா தெரிவித்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


