சினமூட்டும் நடவடிக்கைகளிலிருந்து அரச பரிபாலனத்தை பாதுகாக்கும் வகையில் 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்துவது எல்லா நிலைகளிலும் பொருத்தமானது என்பதை உறுதி செய்வதற்கு அச்சட்டத்தை ஆரசாங்கம் மீள் ஆய்வு செய்யவிருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் சாயிட் தெரிவித்தார்.
வேறு நோக்கம் எதுவுமின்றி ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கு மட்டும் பிரத்தியேகமாக 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இதனை மீள் ஆய்வு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரத்தை கையாளும் ஒரு நடவடிக்கையாக அமைச்சரவை இம்முடிவை எடுத்துள்ளதாக அஸாலினா தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


