Mar 6, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் விவகாரத்தில் பழிவாங்கும் உணர்ச்சி இல்லை: டத்தோஸ்ரீ அன்வார்
அரசியல்

நஜீப் விவகாரத்தில் பழிவாங்கும் உணர்ச்சி இல்லை: டத்தோஸ்ரீ அன்வார்

Share:

கோலாலம்பூர், டிச. 13-


அரசாணை உத்தரவு மற்றும் மன்னிப்பு வாரிய விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக தாம் பழிவாங்கும் உணர்ச்சியைக் கொண்டிருக்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.

நஜீப் விவகாரத்தில் தம்மை சாடி வருகின்றவர்கள், போதுமான அறிவு முதிர்ச்சியைக்கொண்டிருக்கவில்லை என்பதையும் பிரதமர் சாடினார்.

நாட்டின் பிரதமர் என்ற முறையில் . நஜீப் விவகாரத்தில் தமது பொறுப்பை உணர்த்திருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.

நாட்டின் பிரதமராக துன் மகாதீர் முகமது இருந்த போது முதல் முறையாக தாம் சிறைக்கு அனுப்பப்பட்டதாக அன்வார் நினைவுகூர்ந்தார். அதன் பின்னர் நஜீப் பிரதமராக இருந்த போது, தாம் இரண்டாவது முறையாக சிறைக்கு அனுப்பப்பட்டதாக அன்வார் விவரித்தார்.

தற்போது நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகித்த போதிலும் அவர்களுக்கு எதிராக பழிவாங்கும் உணர்ச்சியை தாம் கொண்டிருக்க முடியாது, அதற்கு இடம் அளிக்கவும் இயலாது . அனைவருக்கும் தாம் நியாயமாக செயல்பட வேண்டும் என்பதையும் அன்வார் தெளிவுபடுத்தினார்.

நஜீப் மேல்முறையீடு என்பது ஒவ்வொரு கைதிக்கும் வழங்கப்படும் தனிப்பட்ட உரிமையாகும். அதில் தாம் தலையிடவோ, அது குறித்து வியாக்கியானம் செய்யவோ, கருத்துக் கூறவோ இயலாது என்பதையும் பிரதமர் விளக்கினார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி