பினாங்கு முதலமைச்சர் பதவியை ஒருவர், இரண்டு தவணைக்காலத்திற்கு மேல் வகிக்கக்கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள மாநில அரசியலமைப்புச் சட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்யப்படாது என்று மாநில டிஏபி தலைவர் சௌ கோன் இயோவ் உத்தரவாதம் அளித்துள்ளார். மாநில முலமைச்சராக பதவியேற்பவர், எந்தவொரு தவணைக்காலமின்றி அப்பதவியில் நீடிப்பதற்கு ஏதுவாக மாநில அரசியலமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிற்கும் உடன்படவில்லை என்பதை பினாங்கு முதலமைச்சரான சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார். தவணைக்காலமின்றி ஒருவர் முதலமைச்சர் பதவி வகிப்பதற்கு ஏதுவாக நடப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையை யார் முன்வைத்துள்ளார்கள் என்பது தமக்கு தெரியாது என்று சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


