May 3, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி
அரசியல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

Share:

அலோர் ஸ்டார், மே.03-

அடுத்த 16-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒரு மெட்ரிக் டன் நெல்லுக்கான அடிப்படை விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவதாக தேசியக் கூட்டணியான Perikatan Nasional உறுதியளித்துள்ளது. அலோர் ஸ்டாரில் நடைபெற்ற விவசாயிகளின் அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான், தற்போதுள்ள 1,500 ரிங்கிட் விலை விவசாயிகளின் வாழ்க்கைச் செலவிற்கு போதுமானதாக இல்லை என்பதால், இந்த விலை உயர்வை வரும் தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாகச் சேர்ப்போம் எனத் தெரிவித்தார்.

விவசாயிகளின் நலனைப் பேணவும், நாட்டின் உணவுப் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்திய அவர், டீசல் மானியம் போன்ற உதவிகளை வழங்குவதில் தற்போதைய அரசாங்கம் தயக்கம் காட்டக்கூடாது என்றும் சாடினார்.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை