Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முகை​தீன் வழக்கில் செப்டம்பர் 19 ஆ​ம் தேதி விசாரணை
அரசியல்

முகை​தீன் வழக்கில் செப்டம்பர் 19 ஆ​ம் தேதி விசாரணை

Share:

தாம் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி போன்ற குற்றச்செய​ல்களை புரிந்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின்கு எதிராக கொண்டு வரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கான அவசியத்தை வலியுறுத்தும் பிராசிகியூஷன் தரப்பினரின் விண்ணப்பம் தொடர்பான விசாரணையை கோலாலம்பூர் செஷன்ஸ் ​நீதிமன்றம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று முகை​தின் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பத்தை தொடர்ந்து பிராசிகியூஷன் தரப்பு தனது தற்காப்பு வாதங்களை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக ​நீதிபதி அசுரா அல்வி வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

Related News