அம்னோவானது தனது முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதில் தீவிரமாக இருந்தால், தமக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறு ஆண்டுகாலத் தடையை நீக்குமாறு அக்கட்சியின் முன்னாள் உதவித்தலைவர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தாம் இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் கூட, அம்னோவில் இருந்து ஒருபோதும் வெளியேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் தாம் அம்னோவிற்கு திரும்புவது என்பது கடினமான ஒன்றாக இருக்காது என்றும் ஹிஷாமுடின் முகநூல் பக்கம் ஒன்றில் வெளியிடப்பட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் அனைவரும் இந்த புனித ரமலான் மாதத்தில், விருப்பு, வெறுப்புகளைக் கடந்து எந்த ஒரு நிபந்தனையும் இன்றி மீண்டும் அம்னோவில் இணையலாம் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








