Apr 24, 2026
Thisaigal NewsYouTube
பலதார திருமண நாயகன் போல் காட்டிக்கொள்ள விரும்புகிறார்
அரசியல்

பலதார திருமண நாயகன் போல் காட்டிக்கொள்ள விரும்புகிறார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 05-

தாம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அந்த திருமணத்தை தமது முதல் மனைவியே முன்னின்று நடத்தி வைத்ததாகவும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நார் – ரை பெட்டாலிங் ஜெயா முன்னாள் பிகேஆர் எம்.பி. மரியா சின் சாடினார்.

தமக்கு உள்ள 4 ஒதுக்கீட்டு கோட்டாவில் இரண்டை நிறைவு செய்து விட்டதாகவும், இன்னும் இரண்டு உள்ளது என்றும் எக்காள சிரிப்புடன் மேலும் இரண்டு திருமணத்தை செய்து கொள்ள முடியும் என்று மறைமுகமாக சனூசி பேசியிருப்பது தொடர்பில் முன்னாள் பெர்சே தலைவரான மரியா சின் கருத்துரைத்தார்..

சனூசியின் கூற்றானது, பல்துலக்கும் பிரஸை மாற்றிக்கொள்வது போல ஆண்கள், பலதார திருமணத்தை மிக எளிதாக செய்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது என்று மரியா சின் குறிப்பிட்டார்.

இது, ஒரு தலைவரின் பார்வையாக இருப்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டமானதாகும் என்று பெண்களின் உரிமை போராட்டவாதியான மரியா சின் குறிப்பிட்டார்.

ஒரு ஆண் பலதார திருமணங்களை புரிந்து கொண்டாலும் மனைவிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளை மறந்து விடக்கூடாது. ஒரு கணவன் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தால் வழங்கப்பட்ட அனைத்து கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று மரியா சின் வலியுறுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!