Aug 11, 2026
Thisaigal NewsYouTube
முகமட் ரஃபிஸி ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்
அரசியல்

முகமட் ரஃபிஸி ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.03-

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ரஃபிஸி ரம்லி, பதவி விலகுதற்கானத் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஒரு சந்திப்புக் கூட்டத்தில் பதவி விலகுவதற்கான தனது நோக்கத்தை ரபிஸி ரம்லி வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

எனினும் ரஃபிஸி தனது அலுவலகத்தை காலி செய்து விட்டதாகக் கூறப்படுவதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுத்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற PKR கட்சியின் தொகுதி அளவிலான தேர்தலில், தேர்தல் நடத்தப்பட்ட முறையில் அதிருப்தி கொண்டுள்ள ரஃபிஸி, தனது பதவியை ராஜினமா செய்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தார் என்று அவரின் தீவிர ஆதரவாளர் ஒருவரை மேற்கோள் காட்டி சீனப் பத்திரிக்கை சின் சியூ டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

பொருளாதார அமைச்சரான ரஃபிஸி, தற்போது விடுமுறையில் உள்ளார். வரும் மே 31 ஆம் தேதி வரை அவர் விடுப்பில் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது