Mar 4, 2026
Thisaigal NewsYouTube
தெங்கு ஸாஃப்ருலுக்கான புதிய பதவி வரும் டிசம்பர் 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் - பிரதமர் அன்வார் அறிவிப்பு
அரசியல்

தெங்கு ஸாஃப்ருலுக்கான புதிய பதவி வரும் டிசம்பர் 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் - பிரதமர் அன்வார் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.01-

நாளை டிசம்பர் 2-ஆம் தேதி, தனது இரண்டாவது செனட்டர் பதவிக் காலத்தை நிறைவு செய்யும், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் நாடாளுமன்றத்தில் புதிய பதவி ஏற்கவுள்ளார்.

வரும் புதன்கிழமை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவருக்கான புதிய பதவியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செனட்டராகப் பதவி வகித்து வரும் அவர், நாளையோடு தனது ஆறு ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்கின்றார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் முகைதீன் யாசினின் அமைச்சரவையில் முதன் முதலாக செனட்டராகப் நியமிக்கப்பட்ட தெங்கு ஸாஃப்ருல், அதன் பின்னர் கடந்த 2022-ஆம் ஆண்டு, இரண்டாவது தவணையாக செனட்டராக நியமிக்கப்பட்டார்.

மேலும், அவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கம் உட்பட பல நிர்வாகங்களில் பணியாற்றியுள்ளார்.

இதனிடையே டிசம்பர் 2-ஆம் தேதி, தனது பதவிக் காலம் நிறைவடைந்ததும், அப்பதவியில் மற்றவர்களுக்கு வழி விடுவதாக கடந்த நவம்பர் 13-ஆம் தேதி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் அவர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

புக்கிட் ஜெலுத்தோங் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: உரிமைகளை உறுதி செய்ய 23 முன்னாள் தொழிலாளர்களுடன் பாப்பாராய்டு நேரடிச் சந்திப்பு

புக்கிட் ஜெலுத்தோங் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: உரிமைகளை உறுதி செய்ய 23 முன்னாள் தொழிலாளர்களுடன் பாப்பாராய்டு நேரடிச் சந்திப்பு

தொழிலாளர் சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குத் தடை: வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்த இனி அனுமதி இல்லை - டத்தோஸ்ரீ ரமணன் அறிவிப்பு

தொழிலாளர் சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குத் தடை: வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்த இனி அனுமதி இல்லை - டத்தோஸ்ரீ ரமணன் அறிவிப்பு