முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், அம்னோவிற்குத் திரும்ப விரும்புகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சியில் மீண்டும் இணைய அவர் விண்ணப்பித்துள்ளார்.
அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவருமான கைரி நேற்று தம்மைச் சந்தித்த போது, கட்சிக்குத் திரும்புவதற்கான தனது விண்ணப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்ததாக அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அகமது ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.
கைரியின் விண்ணப்பம் தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அது மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட தரப்பிடம் அனுப்பபடும் என அவர் கூறினார்.
பல்வேறு துறைகளில் இதற்கு முன் பதவி வகித்து வந்த கைரி, 2022 பொதுத் தேர்தலின் போது கட்சிக் கட்டொழுங்கை மீறியதற்காக 2023- ஜனவரியில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ரெம்பாவ் தொகுதியில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், தேர்தலுக்கு முன்பு ஜாஹித் ட்டை வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.
தேர்தலில் பாகாத்தான் ஹராப்பான் கோட்டையான சுங்கை பூலோவில் போட்டியிட்ட அவர் பி.கே.ஆர்-ரின் ஆர். ரமணனிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.








