Mar 5, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தல் இந்தியர்களும் Orang Asli-யும் வெற்றியை நிர்ணயிப்பர்
அரசியல்

கோலகுபு பாரு இடைத் தேர்தல் இந்தியர்களும் Orang Asli-யும் வெற்றியை நிர்ணயிப்பர்

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 26-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவர்களாக தொகுதியை சேர்ந்த இந்திய வாக்காளர்களும், Orang Asli- யும் திகழ்கின்றனர் என்று பெரிக்காத்தான் நேஷனலின் முக்கிய உறுப்புக்கட்சியான பெர்சத்து கூறுகிறது.

இந்த இடைத் தேர்தலில் யார் வெற்றிப்பெறப் போவது என்பதை முடிவு செய்வது இந்திய மற்றும் Orang Asli வாக்காளர்களின் கைகளில் உள்ளது என்று Bersatu கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

இந்திய மற்றும் பூர்வக்குடி இனத்தை சேர்ந்த வாக்காளர்கள் 6,280 பேர் இருக்கின்றனர். இவர்கள் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அந்த கட்சியே இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ரசாலி இட்ரிஸ் குறிப்பிட்டார்.

வேலை வாய்ப்பு, கல்வி, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சமூக நலன், எதிர்காலம் போன்ற முக்கிய விவகாரங்களில் இந்திய சமுதாயத்தையும், பூர்வகுடியினரையும் ஒற்றுமை அரசாங்கம் ஓரங்கட்டி வருகிறது.

இந்திய வாக்காளர்கள் மஇகாவை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று நினைக்கும் அவர்கள், பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிப்பதற்கான நேரம் கனிந்து விட்டதாக நம்புகின்றனர்..

குறிப்பாக மக்கள் நலனை உரக்க பேசுவதிலும் வாதிடுவதிலும் உறுதியாக இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் மீது இந்திய வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என்று டத்தோ ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்