Apr 24, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தல் இந்தியர்களும் Orang Asli-யும் வெற்றியை நிர்ணயிப்பர்
அரசியல்

கோலகுபு பாரு இடைத் தேர்தல் இந்தியர்களும் Orang Asli-யும் வெற்றியை நிர்ணயிப்பர்

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 26-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவர்களாக தொகுதியை சேர்ந்த இந்திய வாக்காளர்களும், Orang Asli- யும் திகழ்கின்றனர் என்று பெரிக்காத்தான் நேஷனலின் முக்கிய உறுப்புக்கட்சியான பெர்சத்து கூறுகிறது.

இந்த இடைத் தேர்தலில் யார் வெற்றிப்பெறப் போவது என்பதை முடிவு செய்வது இந்திய மற்றும் Orang Asli வாக்காளர்களின் கைகளில் உள்ளது என்று Bersatu கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

இந்திய மற்றும் பூர்வக்குடி இனத்தை சேர்ந்த வாக்காளர்கள் 6,280 பேர் இருக்கின்றனர். இவர்கள் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அந்த கட்சியே இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ரசாலி இட்ரிஸ் குறிப்பிட்டார்.

வேலை வாய்ப்பு, கல்வி, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சமூக நலன், எதிர்காலம் போன்ற முக்கிய விவகாரங்களில் இந்திய சமுதாயத்தையும், பூர்வகுடியினரையும் ஒற்றுமை அரசாங்கம் ஓரங்கட்டி வருகிறது.

இந்திய வாக்காளர்கள் மஇகாவை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று நினைக்கும் அவர்கள், பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிப்பதற்கான நேரம் கனிந்து விட்டதாக நம்புகின்றனர்..

குறிப்பாக மக்கள் நலனை உரக்க பேசுவதிலும் வாதிடுவதிலும் உறுதியாக இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் மீது இந்திய வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என்று டத்தோ ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!