Dec 22, 2025
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தை அமைப்பதில் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி
அரசியல்

அரசாங்கத்தை அமைப்பதில் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி

Share:

இந்தியா, ஜூன் 04-

இந்திய நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, ஆட்சியமைக்க தேவையான இடங்களை கொண்டுள்ளது.

அதேநேரத்தில், I.N.D.I.A. கூட்டணியும் 230-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் அரசமைக்க விரும்பினால் தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்க வேண்டிய சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் யாருடனும் கூட்டணி அமைக்காத ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 32 இடங்களில் வென்றுள்ளன.

அக்கட்சிகளை தன் கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் முயற்சிக்கலாம் என கூறப்படுகின்றது.

இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் டெல்லியில் இன்று மாலை ஆலோசனையை மேற்கொள்ளவிருக்கின்றனர். இதில், கூட்டணி கட்சிகள் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துவிட்டால், மோடி மீண்டும் பிரதமராவதை காங்கிரசால் தடுக்க முடியாது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்