Apr 24, 2026
Thisaigal NewsYouTube
1MDB வழக்கு விசாரணை முடிந்தப் பின்னர்நஜீப்பை வீட்டுக்காவலில் வைக்க பரிந்துரை
அரசியல்

1MDB வழக்கு விசாரணை முடிந்தப் பின்னர்நஜீப்பை வீட்டுக்காவலில் வைக்க பரிந்துரை

Share:

புத்ராஜெயா, மே 15-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிரான 1MDB வழக்கு விசாரணை முடிந்தப்பின்னர் அவரை வீட்டுக்காவலில் வைப்பது குறித்து மாமன்னர் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

தம்முடைய இந்த அறைகூவல், மாமன்னரின் அதிகாரத்தை புறந்தள்ளுவதாக பொருள்படாது. மாறாக, மாமன்னர் கேட்டுக்கொண்டால் மட்டுமே பிரதமர் என்ற முறையில் இந்த ஆலோசனையை தம்மால் முன்வைக்க முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

கட்டாருக்கு அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டு இருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், DOHA-வில் கட்டார் பொருளாதார ஆய்வரங்கில் Bloomberg செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு முன்பு, நஜீப்பிற்கு எதிரான தண்டனை காலத்தின் ஒரு பகுதியை மாமன்னர் குறைத்து இருப்பதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

வழக்கமான பிரஜைகள், தங்கள் தண்டனை காலத்தை குறைப்பதற்கு மன்னிப்பு வாரியத்திடம் விண்ணப்பிப்பது போன்று நஜீப்பின் விண்ணப்பத்தையும் பரிசீலிக்குமாறு மாமன்னருக்கு தாம் ஆலோசனை வழங்கக்கூடும் என்று அன்வார் குறிப்பிட்டார்.

நஜீப்பிற்கு சிறையில் உள்ள அனைத்து வசதிகளையும் தாம் ஏற்படுத்திக்கொடுத்து இருப்பதையும் பிரதமர் விளக்கினார்.

எனினும் எத்தகைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் சிறைச்சாலை, சிறைச்சாலைதான் என்று அன்வார் குறிப்பிடார்.

ஒரு முன்னாள் கைது என்ற முறையில் இவ்விவகாரம் பற்றி தமக்கு நன்கு தெரியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!