Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மலாய்-இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணி: அன்வாரிடம் முன்னரே ஆலோசித்தார் ஸாஹிட் ஹமிடி!
அரசியல்

மலாய்-இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணி: அன்வாரிடம் முன்னரே ஆலோசித்தார் ஸாஹிட் ஹமிடி!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.18-

மலாய் - இஸ்லாமிய அடிப்படையிலான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கும் தனது திட்டம் குறித்து, அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாக டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கூறினார். நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் ஒற்றுமையையும் பலப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை குறித்து, அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் போதுமான புரிதலைக் கொண்டுள்ளதாக அவர் மேலும் விளக்கினார்.

இத்திட்டம் தொடர்பாக பி.கே.ஆர் கட்சிக்கு இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு ஏதும் வந்துள்ளதா என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரிடம் இன்னும் சரி பார்க்கவில்லை என்று அக்கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு தலைவரும், தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபாமி குறிப்பிட்டார். அம்னோ பொதுப்பேரவையில் ஸாஹிட் ஹமிடியால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை, தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய அங்கமான பி.கே.ஆர் உட்பட பிற கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்