மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், மலேசியாவில் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமான அளவில் உள்ளதாக உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு உறுதியளித்துள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தாலும், அதைக் காரணங்காட்டி விலைகளைத் தன்னிச்சையாக உயர்த்தக் கூடாது எனத் துணை அமைச்சர் டத்தோ புசியா சாலே எச்சரித்துள்ளதோடு, விலையேற்றத்தைக் கண்காணிக்க 'Ops Pantau' சோதனை நாடு முழுவதும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது வணிகர்களிடம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான இருப்பு உள்ள நிலையில், நியாயமற்ற முறையில் விலையை உயர்த்தும் தரப்பினருக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு, ஆதாயமீட்டல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்


