மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், மலேசியாவில் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமான அளவில் உள்ளதாக உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு உறுதியளித்துள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தாலும், அதைக் காரணங்காட்டி விலைகளைத் தன்னிச்சையாக உயர்த்தக் கூடாது எனத் துணை அமைச்சர் டத்தோ புசியா சாலே எச்சரித்துள்ளதோடு, விலையேற்றத்தைக் கண்காணிக்க 'Ops Pantau' சோதனை நாடு முழுவதும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது வணிகர்களிடம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான இருப்பு உள்ள நிலையில், நியாயமற்ற முறையில் விலையை உயர்த்தும் தரப்பினருக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு, ஆதாயமீட்டல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்


