மேற்காசியப் போர் பதற்றத்தால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையிலும், மக்கள் மீதான சுமையைக் குறைக்கப் பெட்ரோல், டீசலுக்கான மாதாந்திர மானியத் தொகையான 320 கோடி ரிங்கிட்டை அரசே ஏற்றுக்கொள்வதாக இரண்டாம் நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிதிச் சீர்திருத்தங்கள் மூலம் கிடைத்துள்ள நிதியைக் கொண்டு இந்தப் கூடுதல் சுமையைத் தாங்கிக்கொள்ள முடிவதாகவும், இதன் மூலம் 'BUDI-95' திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்ந்து நன்மையடைவதை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புவிசார் அரசியல் சூழல்கள் சவாலாக இருந்தாலும், நாட்டின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளதால் இந்த விலை உயர்வை எதிர்கொண்டு பொருளாதாரச் சமநிலையைப் பேண அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என அவர் மேலும் கூறினார்.

Related News

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்


