May 3, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்
அரசியல்

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்

Share:

கல்வி நிறுவனங்களில் தீவிரவாதம் மற்றும் ஆயுத இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறித்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம், தீவிரவாத சிந்தனைகள் கல்வி நிறுவனங்களில் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

மேலும், தீவிரவாத சிந்தனைகளின் தாக்கத்திலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் பாதுகாக்க, அமலாக்க அமைப்புகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் பட்லினா சிடேக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தீவிரவாதத்திற்கு எதிராக போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், மூன்று சிறார்கள் உட்பட ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் மீண்டும் தேஷ் பயங்கரவாத அமைப்பை உயிர்ப்பிக்கும் திட்டம் முறியடிக்கப்பட்டதாக கடந்த வாரம் டத்தோ ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு