Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா
அரசியல்

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

Share:

கோலாகங்சார், இஸ்தானா இஸ்கந்தரியாவில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது, பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட 5.67 மில்லியன் ரிங்கிட் ஜக்காத் தொகையைப் பேரா மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா அவர்கள் ஏற்றுக்கொண்டார். எட்டு தனியார் நிறுவனங்களும், மூன்று தனிநபர்களும் வழங்கிய இந்த ஜக்காத் நிதியில், அதிகபட்சமாக KPJ ஹெல்த்கேர் நிறுவனம் 1.38 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது. சுல்தான் அவர்கள் பெற்றுக்கொண்ட இந்த மொத்தத் தொகையையும் பேரா மாநில இஸ்லாமிய சமய, மலாய் கலாச்சார மன்றத்தின் டான் ஸ்ரீ முகமட் அனுவார் சைனியிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தார்.

Related News