Oct 22, 2025
Thisaigal NewsYouTube
துணைப்பிரதமரின் அறிவிப்பு, மாநில தேர்தலுக்கு தொடர்புயில்லை
அரசியல்

துணைப்பிரதமரின் அறிவிப்பு, மாநில தேர்தலுக்கு தொடர்புயில்லை

Share:

சட்டமன்றத் தேர்தல்​ வேட்புமனுத்தாக்கலுக்கு முதல் நாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, திரெங்கானு மாநிலத்தில் இரண்டு இளையோர் அமைப்புகளுக்கு மிகப்பெரிய நிதி ஒதக்கீட்டை அறிவித்ததற்கும், திரெங்கானு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரெங்கானு மாநில இளைஞர் மன்றத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியும், மாநில மோட்டார் சைக்கிள் கிளப்பிற்கு 2 லட்சம் வெள்ளியும் துணை​ப்பிரதமர் அகமட் ஜாஹிட் அறிவித்து இருப்பதை மூடா கட்சியை சேர்ந்த 19 வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். துணைப்பிரதமரின் இந்த செயல், லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் இப்போது அறிவிக்கப்படாவிட்டாலும் தேர்தல் முடிந்தப்பின்னர், திரெங்கானு மாநில இளையோர் அமைப்புகளுக்கு அந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்பதாகவே இருந்துள்ளது என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!