சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத்தாக்கலுக்கு முதல் நாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, திரெங்கானு மாநிலத்தில் இரண்டு இளையோர் அமைப்புகளுக்கு மிகப்பெரிய நிதி ஒதக்கீட்டை அறிவித்ததற்கும், திரெங்கானு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரெங்கானு மாநில இளைஞர் மன்றத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியும், மாநில மோட்டார் சைக்கிள் கிளப்பிற்கு 2 லட்சம் வெள்ளியும் துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் அறிவித்து இருப்பதை மூடா கட்சியை சேர்ந்த 19 வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். துணைப்பிரதமரின் இந்த செயல், லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் இப்போது அறிவிக்கப்படாவிட்டாலும் தேர்தல் முடிந்தப்பின்னர், திரெங்கானு மாநில இளையோர் அமைப்புகளுக்கு அந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்பதாகவே இருந்துள்ளது என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


