சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத்தாக்கலுக்கு முதல் நாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, திரெங்கானு மாநிலத்தில் இரண்டு இளையோர் அமைப்புகளுக்கு மிகப்பெரிய நிதி ஒதக்கீட்டை அறிவித்ததற்கும், திரெங்கானு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரெங்கானு மாநில இளைஞர் மன்றத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியும், மாநில மோட்டார் சைக்கிள் கிளப்பிற்கு 2 லட்சம் வெள்ளியும் துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் அறிவித்து இருப்பதை மூடா கட்சியை சேர்ந்த 19 வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். துணைப்பிரதமரின் இந்த செயல், லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் இப்போது அறிவிக்கப்படாவிட்டாலும் தேர்தல் முடிந்தப்பின்னர், திரெங்கானு மாநில இளையோர் அமைப்புகளுக்கு அந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்பதாகவே இருந்துள்ளது என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


