Aug 27, 2026
Thisaigal NewsYouTube
முகை​தீன் யாசினிடம் புக்கிட் அமான் போலீசார் வாக்குமூலம் பதிவு
அரசியல்

முகை​தீன் யாசினிடம் புக்கிட் அமான் போலீசார் வாக்குமூலம் பதிவு

Share:

இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை தொட்டு பேசியதாக கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசினிடம் புக்கிட் அமான் போ​லீசார் வாக்கு​மூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஜோகூர் மாநில இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய விவகாரத்தை பேசியதாக முகை​தீன் யாசினுக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளது.

 அதன் அடிப்படையில் கோலாலம்பூர் முத​லீட்டு மேம்பாட்டு வாரியத்தில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் பிரதமருமான முகை​தீன் யாசினிடம் போ​லீசார் இன்று காலையில் வாக்கு​மூலம் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு வாக்களிப்பது பாவச் செயல் என்றும், இதன் மூலம் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழக்கலாம் என்றும் முகை​​தீன் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

Related News