Mar 9, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கு நெருக்கடியைச் சமாளிக்க மலேசியா தயார் நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் அமீர் ஹம்சா உறுதி
அரசியல்

மத்திய கிழக்கு நெருக்கடியைச் சமாளிக்க மலேசியா தயார் நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் அமீர் ஹம்சா உறுதி

Share:

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ளும் வலுவான நிலையில் மலேசியா இருப்பதாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜீஸ் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் தற்போதைய பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் சீராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

"மத்திய கிழக்கு மோதல்களால் உலகளவில் ஏற்படும் தாக்கங்களை உள்வாங்கிக் கொள்ளும் திறன் மலேசியாவிற்கு உண்டு. நமது நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தற்போது நல்ல நிலையில் உள்ளது. சந்தையில் எந்தவிதமான தட்டுப்பாடோ அல்லது இடையூறுகளோ ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

முக்கியமாக, போக்குவரத்து எரிபொருளான RON95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் 0 என்ற மானிய விலையிலேயே அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையின்றித் தக்கவைப்பதற்கான நிதித் திறன் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

அதேவேளையில் உலகச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து, மக்களின் சுமையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமீர் ஹம்சா தெரிவித்தார்.

Related News

முஹிதீன் ஊழல் வழக்கு: டிக்டாக்  வீடியோக்களை ஆதாரமாகக் கொள்வதா? - தற்காப்புத் தரப்பு கடும் எதிர்ப்பு

முஹிதீன் ஊழல் வழக்கு: டிக்டாக் வீடியோக்களை ஆதாரமாகக் கொள்வதா? - தற்காப்புத் தரப்பு கடும் எதிர்ப்பு

ரம்ழான் முன்னெடுப்பு: 535 அமைச்சின் பணியாளர்களுக்கு பேரீச்சம்பழம் வழங்கி அன்பைப் பகிர்ந்தார் அமைச்சர் ஸ்டீவன் சிம்

ரம்ழான் முன்னெடுப்பு: 535 அமைச்சின் பணியாளர்களுக்கு பேரீச்சம்பழம் வழங்கி அன்பைப் பகிர்ந்தார் அமைச்சர் ஸ்டீவன் சிம்

"அம்னோவில் இணையும் எண்ணம் இல்லை ; பாஸ் கட்சியே என் எதிர்காலம்" - அனுவார் மூசா அறிவிப்பு

"அம்னோவில் இணையும் எண்ணம் இல்லை ; பாஸ் கட்சியே என் எதிர்காலம்" - அனுவார் மூசா அறிவிப்பு

இரண்டாம் கட்ட எஸ்டிஆர் உதவித் தொகையானது நாளை முதல் செலுத்தப்படும் / 5.2 மில்லியன் மலேசியர்கள் பயனடைகின்றனர் / பிரதமர் அன்வார் அறிவிப்பு

இரண்டாம் கட்ட எஸ்டிஆர் உதவித் தொகையானது நாளை முதல் செலுத்தப்படும் / 5.2 மில்லியன் மலேசியர்கள் பயனடைகின்றனர் / பிரதமர் அன்வார் அறிவிப்பு

மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் பாரிசான் நேசனல் தனித்துப் போட்டியிட வேண்டும்: வீ கா சியோங் வலியுறுத்தல்

மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் பாரிசான் நேசனல் தனித்துப் போட்டியிட வேண்டும்: வீ கா சியோங் வலியுறுத்தல்

சீன வாக்காளர்கள் இனி எந்தக் கட்சிக்கும் விசுவாசமானவர்கள் அல்ல: மசீச பொதுச்செயலாளர் கருத்து

சீன வாக்காளர்கள் இனி எந்தக் கட்சிக்கும் விசுவாசமானவர்கள் அல்ல: மசீச பொதுச்செயலாளர் கருத்து