சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி சார்பாக கோலகுபு பாரு தொகுதியில் கடந்த 13 நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று, மூடா கட்சியின் தேசியத் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் நேரடியாக களம் இறங்கி, முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கோலகுபு பாரு நகரில் டாக்டர் சிவபிரகாஸுடன் வணிகத் தளங்களிலும், பொது இடங்களிலும் வாக்காளர்களை சந்தித்த சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான், மூடா கட்சியின் நம்பிக்கை மிகுந்த தொகுதியான கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியில் தங்கள் கட்சியின் மூலம் மக்களின் பிரதிநிதியாக ஒருவரை சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்படி மிக உருக்கமாக வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
மூவின மக்கள் கலந்த தொகுதியான வரலாற்றுச்சிறப்புமிக்க கோலகுபு பாருவில் தலைசிறந்த கல்விமானாகிய டாக்டர் சிவபிரகாஷ்ஸை ஒரு வேட்பாளராக நிறுத்துவதில் கட்சி பெருமைப்படும் அதேவேளையில் பொருளாதாரத்துறையில் சிறந்து விளங்கும் அவரை தொகுதி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


