சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி சார்பாக கோலகுபு பாரு தொகுதியில் கடந்த 13 நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று, மூடா கட்சியின் தேசியத் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் நேரடியாக களம் இறங்கி, முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கோலகுபு பாரு நகரில் டாக்டர் சிவபிரகாஸுடன் வணிகத் தளங்களிலும், பொது இடங்களிலும் வாக்காளர்களை சந்தித்த சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான், மூடா கட்சியின் நம்பிக்கை மிகுந்த தொகுதியான கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியில் தங்கள் கட்சியின் மூலம் மக்களின் பிரதிநிதியாக ஒருவரை சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்படி மிக உருக்கமாக வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
மூவின மக்கள் கலந்த தொகுதியான வரலாற்றுச்சிறப்புமிக்க கோலகுபு பாருவில் தலைசிறந்த கல்விமானாகிய டாக்டர் சிவபிரகாஷ்ஸை ஒரு வேட்பாளராக நிறுத்துவதில் கட்சி பெருமைப்படும் அதேவேளையில் பொருளாதாரத்துறையில் சிறந்து விளங்கும் அவரை தொகுதி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


