Mar 14, 2026
Thisaigal NewsYouTube
முடா கட்சியின் புதிய தலைவராக அமீரா அயிஷா அப்துல் அஸிஸ் தேர்வு
அரசியல்

முடா கட்சியின் புதிய தலைவராக அமீரா அயிஷா அப்துல் அஸிஸ் தேர்வு

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

முடா கட்சியின் 2026 - 2029 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக அமீரா அயிஷா அப்துல் அஸிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் உள்கட்சித் தேர்தலுக்குப் பிறகு, 25 மத்திய செயலவை உறுப்பினர்களின் ஆதரவோடு அமீரா தேர்வு செய்யப்பட்டார்.

புத்ரி வங்சா சட்டமன்ற உறுப்பினரான அமீரா, கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அக்கட்சியின் தோற்றுநரும், முன்னாள் தலைவருமான சையிட் சாடிக் சையிட் ரஹ்மான் பதவி விலகியதைத் தொடர்ந்து, இடைக்காலத் தலைவராக பதவி வகித்து வந்தார்.

கட்சியின், 25 மத்திய செயற்குழு பதவிகளுக்கு, 31 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 125 பிரதிநிதிகள் வாக்களித்ததன் அடிப்படையில், புதிய மத்திய செயற்குழுவானது அமைக்கப்பட்டது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான முடா கட்சியின் தலைமைத்துவம் மற்றும் வியூக திட்டமிடல்களுக்கு அமீராவின் புதிய தலைமைத்துவம் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, தலைவர் பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமீரா, மத்திய செயலவை உறுப்பினர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

ஹம்ஸாவுக்கு பதிலாக பாஸ் எம்பி  ஒருவர் எதிர்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறார் - பெரிக்காத்தான் முடிவு

ஹம்ஸாவுக்கு பதிலாக பாஸ் எம்பி ஒருவர் எதிர்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறார் - பெரிக்காத்தான் முடிவு

கோலாலம்பூர் சிறு வணிகர்களுக்கு நற்செய்தி - கடை வாடகையில் 50 விழுக்காடு தள்ளுபடி

கோலாலம்பூர் சிறு வணிகர்களுக்கு நற்செய்தி - கடை வாடகையில் 50 விழுக்காடு தள்ளுபடி

மேற்காசியப் போர் - மலேசியாவின் பொருளாதாரத் தாக்கம் குறித்து அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி விளக்கம்

மேற்காசியப் போர் - மலேசியாவின் பொருளாதாரத் தாக்கம் குறித்து அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி விளக்கம்

இன்று நடைபெறும் முடா உள்கட்சித் தேர்தல்: சையத் சாதிக்-இன் நிழலில் இருந்து வெளியேறும் ஒரு முயற்சி

இன்று நடைபெறும் முடா உள்கட்சித் தேர்தல்: சையத் சாதிக்-இன் நிழலில் இருந்து வெளியேறும் ஒரு முயற்சி

பாலஸ்தீன மக்கள் ஆதரவு பேரணி: கோலாலம்பூர் அமெரிக்க தூதரகம் முன்பு 300 பேர் ஒன்று கூடினர்

பாலஸ்தீன மக்கள் ஆதரவு பேரணி: கோலாலம்பூர் அமெரிக்க தூதரகம் முன்பு 300 பேர் ஒன்று கூடினர்

பொதுத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

பொதுத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.