கெடா மாநில சட்டமன்றத் தேர்தலில் லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தியர்களின் சட்டமன்றத் தொகுதியாக ஒரு காலத்தில் விளங்கிய லூனாஸ் சட்டமன்றத் தொகுதியை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு சுயேட்சை வேட்பாளரான அரிச்சந்திரன் சின்னப்பையன் களம் இங்கியுள்ளார். லூனாஸ் தொகுதியின் வேட்புமனுத்தாக்கல் இன்று காலையில் கூலிம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. ஐவர், தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். சாவி சின்னத்தில் அரிச்சந்திரன் சின்னப்பையனும் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கைருல் அநுார் ரம்லியும், பக்காத்தான் சார்பில் ஷம்சுல் அநுார் அப்துல்லாவும், மேலும் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களான பன்னீர் செல்வம் சுப்பையா மற்றும் இராஜேந்திரன் நடராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சுயேட்சை வேட்பாளரான 63 வயது அரிச்சந்திரன் சின்னப்பையன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான மின் உதவி ஆணையராக பணியாற்றியவர் ஆவார். தவிர, மலேசிய தேர்தல் ஆணையமான எஸ். பி. ஆர்.எம் ரில் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றிய பரந்த அனுபவத்தை அரிச்சந்திரன் சின்னப்பையன் கொண்டுள்ளார். ஆசிய பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்துறையில் முதுகலைபட்டம் பெற்றவரான அவர், தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் சரளமாக உரையாடும் திறன் கொண்டவராக விளங்குகிறார். இந்தியர்களின் பாரம்பரிய தொகுதியாக விளங்கிய லூனாஸ் தொகுதியை மீட்டு, தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் ஒரு சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளதாக வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அரிச்சந்திரன் சின்னப்பையன் இதனை தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


