உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் காலமானதாக அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, சலாஹுடின் அயூப் ப்பின் ஜோகூர்,பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் தாம் போட்டியிடலாமா? என்று தமது முகநூலில் வினா எழுப்பியுள்ள கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர்டொமினிக் லாவ், சமூக வலைவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
நாட்டின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த ஓர் அமைச்சர் இறந்தது குறித்து கொஞ்சமும் கவலை உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளாத டொமினிக் லாவ், காலியாகி விட்ட பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு குறிவைத்துள்ளதாக கூறியிருப்பது ஒரு கட்சியின் தேசியத் தலைவரின் நாகரீகமின்மையையும், அவரின் குறுகிற சிந்தனையையும் காட்டுகிறது என்று வலைவாசிகள் சாடியுள்ளனர்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


