Apr 23, 2026
Thisaigal NewsYouTube
ஒரே மாதிரியான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்
அரசியல்

ஒரே மாதிரியான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்

Share:

டிச. 22-

SejaTi MADANI என்றழைக்கப்படும் மடானி சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் கிராம முன்னேற்றக் செயற்குழுக்கள், உள்ளூர் சமூகத்தின் சமூக - பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof வலியுறுத்தினார். ஒரே மாவட்டத்தில் இருந்து ஒரே மாதிரியான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அனைத்துத் திட்ட விண்ணப்பங்களும் பல கட்ட மதிப்பீடுகளைக் கடந்து செல்லும். கிராம முன்னேற்றக் செயற்குழுக்கள் மாவட்ட அலுவலகத்துடன் கலந்துரையாடி பொருத்தமானத் திட்டங்கள் குறித்து ஆலோசனை பெறலாம். திட்டங்கள் மாநில மேம்பாட்டு அலுவலகம் வாயிலாகவும் பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு மூலமும் அங்கீகரிக்கப்படும்.

இதுவரை சரவாக்கில் 1,124 கிராம முன்னேற்றக் செயற்குழுக்கள் SejaTi MADANI திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன. இதன் மூலம் விவசாயம், உணவு, கைவினைப் பொருட்கள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் சுமார் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

LUBOK ANTU மாவட்டத்தில் எட்டு கிராம முன்னேற்றக் செயற்குழுக்களுக்கு 7 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி விவசாயம், மீன், கோழி வளர்ப்பு, சுற்றுலா போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்தத் திட்டம் உள்ளூர் மக்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் வகையில் இருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!