மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட ஒரு புதிய முகமான சுந்தரராஜு சோமு மகத்தான வெற்றி பெற்றார். பினாங்கு, முன்னாள் துணை முதல்வர் டாக்டர் P. இராமசாமி, கடந்த மூன்று தவணைக்காலம் தற்காத்து வந்த பிறை சட்டமன்றத் தொகுதியில் சுந்தரராஜு சோமுவின் இந்த வெற்றியின் மூலம் பக்காத்தான் ஹராப்பான் அத்தொகுதியை தற்காத்துக்கொண்டது. நான்கு முனைப்போட்டி நிலவிய பிறை தொகுதியில் சுந்தரராஜுவிற்கு 10,311 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரும், செபெராங் பெராய் முன்னாள் நகராண்மைக்கழக உறுப்பினருமான டேவிட் மார்ஷலுக்கு 1,419 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் சிவசுந்தரம் ராஜலிங்கத்திற்கு 1,492 வாக்குகளும், மூடா கட்சி வேட்பாளர் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணனுக்கு 358 வாக்குகளும் கிடைத்தன. சொத்து மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான சுந்தரராஜு, 8,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


