Mar 5, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தலில் PAS கட்சி புறக்கணிப்பதாக கூறப்படுவது உண்மையல்ல
அரசியல்

கோல குபு பாரு இடைத்தேர்தலில் PAS கட்சி புறக்கணிப்பதாக கூறப்படுவது உண்மையல்ல

Share:

ஹுலு சிலாங்கூர், ஏப்ரல் 29-

கோல குபு பாரு இடைத்தேர்தலில் பெரிக்காதான் நசியனால் வேட்பாளரை ஆதரித்து மேற்கொள்ளப்படும் பரப்புரைகளில், PAS கட்சியின் ஒத்துழைப்பு குறித்து முன்வைக்கப்படும் எதிர்மறையான கருத்துகளை யாரும் நம்பக்கூடாது என பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தப்பட்ட தேர்தலில், தங்கள் கூட்டணியின் வேட்பாளரும் ஹுலு சிலாங்கூர் பெர்சத்து-வின் இடைக்கால தலைவருமான கைருல் அஸ்ஹாரி சௌத்-ட்டை வெற்றி பெற செய்யும் நோக்கில், டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தலைமையிலான PAS கட்சியினர், தேர்தல் பணிப்படைகளை வலுபடுத்தி வருவதோடு கடுமையாக உழைத்து வருவதாக, ரட்ஸி ஜிடின் கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிகழ்வின் போது, ஹாடி அவாங், பெர்லிஸ்-சில் இருந்தது தொடர்பாக PKR கட்சியின் தகவல் பிரிவு தலைவர் பாஹ்மி பட்ஜில் கேள்வி எழுப்பியிருந்தத வேளை அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

இதனிடையே, பெர்லிஸ்-சில் நடைபெற்ற PAS கட்சியின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் ஹாடி அவாங் கலந்துக்கொண்டிருந்ததாகவும் ரமலான் மாதத்திற்கு முன்பே, அவரது வருகை முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் PAS கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி, இதற்கு முன்பு பாஹ்மி -க்கு பதிலளித்திருந்தார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்