Mar 5, 2026
Thisaigal NewsYouTube
சூலு விவகாரத்தில் பின்னணியில் உள்ள அந்த துரோகிகள் அடையாளம் காட்டப்படுவர்
அரசியல்

சூலு விவகாரத்தில் பின்னணியில் உள்ள அந்த துரோகிகள் அடையாளம் காட்டப்படுவர்

Share:

சபா பிரதேச உரிமையை கோருவதில் தங்களை சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு தரப்பினர் வழக்கு தொடத்த விவகாரத்தில் அதன் பின்னணியில் உள்ள துரோகிகள் அடையாளம் காட்டப்படுவர் என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதேச உரிமை தொடர்பான வழக்கில் அனைத்து மேல்முறையீடுகளும் முடிவடைந்தப் பின்னர் இவ்விவகாரத்தில் பின்னணியில் இருந்த செயல்பட்டவர்கள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படுவர் என்று அஸலினா குறிப்பிட்டார்.

அந்த துரோகிகள் நாட்டிற்குள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பானின் செலாயாங் எம்.பி. வில்லியம் சிங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் Azalina மேற்கண்டவாறு கூறினார்.

சபாவில் பிரதேச உரிமையை கோருவதில் நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட்ட நபர்களின் பின்னணியில் இருந்தவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்று வாரிசான் எம்.பி. டத்தோஸ்ரீ ஷாஃபி அப்தால்கோரிக்கை விடுத்தார்.

ஜூலு தொடர்புடைய வழக்குகளில் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிவடைந்தப் பின்னர் அந்த துரோகிகள் நிச்சயம் அடையாளம் காட்டப்படுவர் என்று அஸாலினா மேலும் விளக்கினார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு