Mar 7, 2026
Thisaigal NewsYouTube
மகளிர், இளையோர் வேட்பாளர்கள் கையில்தான் தேசிய முன்னணியின் எதிர்காலம் உள்ளது
அரசியல்

மகளிர், இளையோர் வேட்பாளர்கள் கையில்தான் தேசிய முன்னணியின் எதிர்காலம் உள்ளது

Share:

நவ. 24-

வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி மேற்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, வலியுறுத்தியுள்ளார். அவற்றில் முதன்மையாக, பெண்களையும் இளைஞர்களையும் வேட்பாளர்களாக முன்னிறுத்த இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், வயது மட்டுமின்றி, அடிப்படை நிலை மக்களிடையே செல்வாக்கு செலுத்தும் திறன் கொண்டவர்களை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்..

மேலும், அரசாங்க கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடனான உறவை வலுப்படுத்துதல், சமூக ஊடகங்களில் திறமையை மேம்படுத்துதல், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய முன்னணி - நம்பிக்கைக் கூட்டணி இடையேயான இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மக்களின் நலன், அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் புதிய திட்டங்கள் மூலம், தேசிய முன்னணி வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் அகமாட் ஸாஹிட்.

Related News

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி