Oct 25, 2025
Thisaigal NewsYouTube
மகளிர், இளையோர் வேட்பாளர்கள் கையில்தான் தேசிய முன்னணியின் எதிர்காலம் உள்ளது
அரசியல்

மகளிர், இளையோர் வேட்பாளர்கள் கையில்தான் தேசிய முன்னணியின் எதிர்காலம் உள்ளது

Share:

நவ. 24-

வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி மேற்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, வலியுறுத்தியுள்ளார். அவற்றில் முதன்மையாக, பெண்களையும் இளைஞர்களையும் வேட்பாளர்களாக முன்னிறுத்த இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், வயது மட்டுமின்றி, அடிப்படை நிலை மக்களிடையே செல்வாக்கு செலுத்தும் திறன் கொண்டவர்களை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்..

மேலும், அரசாங்க கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடனான உறவை வலுப்படுத்துதல், சமூக ஊடகங்களில் திறமையை மேம்படுத்துதல், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய முன்னணி - நம்பிக்கைக் கூட்டணி இடையேயான இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மக்களின் நலன், அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் புதிய திட்டங்கள் மூலம், தேசிய முன்னணி வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் அகமாட் ஸாஹிட்.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்