Aug 7, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு
அரசியல்

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 10 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் பாரிசான் நேஷனல் சார்பில் 8 பேரும், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் 2 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

பாரிசான் நேஷனல் சார்பில் பாலோங், லிங்கி, செம்போங், சுங்கை லூய், லெங்கேங், லாபு, கெமெஞ்சே மற்றும் சென்னா தொகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முறையே முஸ்தஃபா நாகூர், ஃபைஸால் ரம்லி, ஸைஃபுல் பாஹ்ரி இட்ரிஸ், ராஸி அலி, அஸ்னா அமீன், நூர் உமைரா ஹாசிம், சுஹைமிஸான் பிஸார் மற்றும் சியோவ் கோங் சூன் ஆகியோர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் செர்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஃபைருஸ் இசா மற்றும் சிக்கமாட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரஸாலி அபு சமா ஆகியோர் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நியமனக் கடிதங்களை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் யாங் டிபெர்துவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் இன்று இஸ்தானா பெசார் ஶ்ரீ மெனாந்தி அரண்மனையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமும் கலந்து கொண்டார்.

36 இடங்களைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மொத்தம் 25 இடங்களில் வெற்றி பெற்று புதிய மாநில அரசாங்கத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

இணைய மோசடி, சூதாட்ட பதிவுகள் தானாகவே நீக்கம் – சமூக ஊடகங்களுக்கு அமைச்சு அவகாசம்

இணைய மோசடி, சூதாட்ட பதிவுகள் தானாகவே நீக்கம் – சமூக ஊடகங்களுக்கு அமைச்சு அவகாசம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளையும் தக்கவைக்க பாரிசான் இலக்கு

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளையும் தக்கவைக்க பாரிசான் இலக்கு

தொடக்கத்திலேயே சவால்களை எதிர்கொள்ளும் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்  - கட்சிக்குள் அதிகாரப் போட்டியா?

தொடக்கத்திலேயே சவால்களை எதிர்கொள்ளும் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் - கட்சிக்குள் அதிகாரப் போட்டியா?