15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பினாங்கு சட்டமன்றம் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான பிரகடனத்தில், மாநில ஆளுநர் துன் அஹ்மாட் ஃபுஸி அப்துல் ரசாக் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
வேட்புமனுத் தினத்திற்கான மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வார கால அவகாசம் அனைத்துக் கட்சிகளுக்கும் அந்தந்த கட்சிகளின் பணிகளைச் செய்ய போதுமானதாக கருதப்படுவதாக பினாங்கு மாநில முதல்வர் சொவ் கொன் யோவ் தெரிவித்துள்ளார்.
தற்போது, பினாங்கு மாநிலத்தில் பகாத்தான் ஹரப்பான் 33 தொகுதிகளையும், பரிசான் நெஷ்னல் 2 தொகுதிகளையும்,பெர்சத்து 4 தொகுதிகளையும்,பாஸ் ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது

Related News

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது : 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்


