15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பினாங்கு சட்டமன்றம் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான பிரகடனத்தில், மாநில ஆளுநர் துன் அஹ்மாட் ஃபுஸி அப்துல் ரசாக் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
வேட்புமனுத் தினத்திற்கான மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வார கால அவகாசம் அனைத்துக் கட்சிகளுக்கும் அந்தந்த கட்சிகளின் பணிகளைச் செய்ய போதுமானதாக கருதப்படுவதாக பினாங்கு மாநில முதல்வர் சொவ் கொன் யோவ் தெரிவித்துள்ளார்.
தற்போது, பினாங்கு மாநிலத்தில் பகாத்தான் ஹரப்பான் 33 தொகுதிகளையும், பரிசான் நெஷ்னல் 2 தொகுதிகளையும்,பெர்சத்து 4 தொகுதிகளையும்,பாஸ் ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


