சிரம்பான், ஜூலை.28-
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலையொட்டி முன்கூட்டியே வாக்களிப்பு இன்று காலை தொடங்கிய நிலையில், ரெப்பா தொகுதி வேட்பாளர் வீரப்பன் சுப்பிரமணியம் அதில் கலந்து கொண்டு முன்கூட்டியே வாக்காளர்களை நேரில் சந்தித்தார்.

முன்கூட்டியே வாக்களிப்பு என்பது வாக்குப் பதிவு மட்டுமல்ல, நெகிரி செம்பிலானின் புதிய எதிர்காலத்தை உருவாக்கும் முதல் படியாகும் என்றும் வீரப்பன் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

மேலும், ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முன்வந்த ஒவ்வொரு வாக்காளருக்கும் அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதோடு, வாக்களிக்கும் பொறுப்பையும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றிய பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு அவர் தமது சிறப்பு நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், இறுதி வாக்குப்பதிவு நாள் வரை இதே உற்சாகத்துடன் மக்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மக்களின் நலன் மற்றும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்தை தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.








