Mar 6, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரை மகாத்மா காந்தி என வர்ணித்தது, சுயநலம் கிடையாது
அரசியல்

பிரதமரை மகாத்மா காந்தி என வர்ணித்தது, சுயநலம் கிடையாது

Share:

கோலாலம்பூர், டிச.10-


நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு தமக்கு கிஞ்சிற்றும் சுயநலம் கிடையாது என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமரை இவ்வாறு புகழ்ந்துரைப்பது மூலம் அமைச்சர் பதவி உட்பட அரசாங்கத்தின் உயர் பதவிகளை பெற வேண்டும் என்ற நோக்கம் தமக்கு அறவே கிடையாது என்பதையும் ராயர் விளக்கினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை தாம் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசியதற்கும், அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் சில தரப்பினர் தமக்கு எதிராக வசைப்பாடி வருவது, தமது மனதை காயப்படுத்தியிருப்பதையும் ராயர் சுட்டிக்காட்டினார்.

டத்தோஸ்ரீ அன்வாரை கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் தாம் அறிந்து வைத்திருப்பதாக ராயர் குறிப்பிட்டார்.

ஓர் அடிப்படையற்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறைவாசம் சென்றார். பின்னர் ரீபோமார்சி எனும் மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்து, போராட்டத்தை முன்னெடுத்தார்.

அன்வாரின் இந்த எழுச்சிமிகுந்த போராட்டத்தின் மகத்துவத்தை உணர்ந்த காரணத்தினால் உலகம் போற்றும் இரு தலைவர்களை முன்நிறுத்தி, அன்வாரின் போராட்டத்தை தாம் சித்தரித்ததாக ராயர் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை