அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்குவதற்கு அரசாங்க சேவையில் உயர் பதவி வகித்த முன்னாள் அதிகாரிகளை வளைத்து போடும் நடவடிக்கையில் பெரிக்காத்தான் நேஷனல் ஈடுபட்டு வருகிறது. இதனை பெரிக்காத்தான் நேஷனலில் பொதுச் செயலாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் உறுதிபடுத்தியுள்ளார்.
மாநில மற்றும் கூட்டரசு அரசாங்க அளவில் அரசுப்பணியில் உயரியப் பொறுப்பை ஏற்றிருந்து ஓய்வுப்பெற்ற முன்னாள் அதிகாரிகளை இலக்காக கொண்டு தற்போது பெரிக்காத்தான் நேஷனலில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆற்றல், நேர்மை மற்றும் நம்பிக்கை நிறைந்த அந்த முன்னாள் அதிகாரிகள் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து கரம் கோர்ப்பது மூலம் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியுள்ளதாக ஹம்சா ஜைனுடின் தெரிவத்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


