அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்குவதற்கு அரசாங்க சேவையில் உயர் பதவி வகித்த முன்னாள் அதிகாரிகளை வளைத்து போடும் நடவடிக்கையில் பெரிக்காத்தான் நேஷனல் ஈடுபட்டு வருகிறது. இதனை பெரிக்காத்தான் நேஷனலில் பொதுச் செயலாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் உறுதிபடுத்தியுள்ளார்.
மாநில மற்றும் கூட்டரசு அரசாங்க அளவில் அரசுப்பணியில் உயரியப் பொறுப்பை ஏற்றிருந்து ஓய்வுப்பெற்ற முன்னாள் அதிகாரிகளை இலக்காக கொண்டு தற்போது பெரிக்காத்தான் நேஷனலில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆற்றல், நேர்மை மற்றும் நம்பிக்கை நிறைந்த அந்த முன்னாள் அதிகாரிகள் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து கரம் கோர்ப்பது மூலம் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியுள்ளதாக ஹம்சா ஜைனுடின் தெரிவத்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


