அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்குவதற்கு அரசாங்க சேவையில் உயர் பதவி வகித்த முன்னாள் அதிகாரிகளை வளைத்து போடும் நடவடிக்கையில் பெரிக்காத்தான் நேஷனல் ஈடுபட்டு வருகிறது. இதனை பெரிக்காத்தான் நேஷனலில் பொதுச் செயலாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் உறுதிபடுத்தியுள்ளார்.
மாநில மற்றும் கூட்டரசு அரசாங்க அளவில் அரசுப்பணியில் உயரியப் பொறுப்பை ஏற்றிருந்து ஓய்வுப்பெற்ற முன்னாள் அதிகாரிகளை இலக்காக கொண்டு தற்போது பெரிக்காத்தான் நேஷனலில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆற்றல், நேர்மை மற்றும் நம்பிக்கை நிறைந்த அந்த முன்னாள் அதிகாரிகள் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து கரம் கோர்ப்பது மூலம் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியுள்ளதாக ஹம்சா ஜைனுடின் தெரிவத்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


