Oct 25, 2025
Thisaigal NewsYouTube
வாரத்தில் நான்கரை நாள் வேலை முறை, ஜோகூர் பரிசீலனை
அரசியல்

வாரத்தில் நான்கரை நாள் வேலை முறை, ஜோகூர் பரிசீலனை

Share:

ஜோகூர்பாரு, நவ. 21-


ஜோகூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கரை நாள் வேலை முறையை அமல்படுத்துவது குறித்து ஜோகூர் மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜோகூர் மாநிலத்தின் வார இறுதி நாட்கள் விடுமுறை, மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படுவதற்கு மாநில அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு ஏற்ப வாரத்தில் நான்கரை நாள் வேலை முறையும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த நான்கரை நாள் வேலை முறையை அமல்படுத்துவது தொடர்வில் முன்னதாக மாநில இடைக்கால சுல்தான், துங்கு மாக்கோத்தா இஸ்மாயில் மற்றும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று இன்று ஜோகூர் மன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை தெரிவித்தார்.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்