Dec 21, 2025
Thisaigal NewsYouTube
செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியின் வீட்டில் மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மீட்பு
அரசியல்

செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியின் வீட்டில் மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மீட்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 14-

நாட்டில் செல்வாக்குமிக்க அரசியவாதி ஒருவரின் பாதுகாப்பான இல்லமாக இருந்த கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை மீட்டுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து 50 லட்சம் வெள்ளி மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனைகள் யாவும் கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும் உள்ள அந்த அரசியல்வாதியின் இரு இல்லங்களில் நடத்தப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

அண்மையில் இருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கைதானவர்களில் ஒருவர், சிலாங்கூர் மந்திரி பெசார் வாரியத்தின் முன்னாள் அதிகாரி ஆவார்.

சிலாங்கூர் முதலீட்டு துணை நிறுவனத்தின் கீழ் மணல் சுரங்க குத்தகை தொடர்பில் லட்சக்கணக்கான வெள்ளி ஊழல் விவகாரம் காரணமாக அவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியின் வீட்டில் மேலும் 3 லட்சத... | Thisaigal News