Apr 23, 2026
Thisaigal NewsYouTube
செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியின் வீட்டில் மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மீட்பு
அரசியல்

செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியின் வீட்டில் மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மீட்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 14-

நாட்டில் செல்வாக்குமிக்க அரசியவாதி ஒருவரின் பாதுகாப்பான இல்லமாக இருந்த கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை மீட்டுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து 50 லட்சம் வெள்ளி மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனைகள் யாவும் கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும் உள்ள அந்த அரசியல்வாதியின் இரு இல்லங்களில் நடத்தப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

அண்மையில் இருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கைதானவர்களில் ஒருவர், சிலாங்கூர் மந்திரி பெசார் வாரியத்தின் முன்னாள் அதிகாரி ஆவார்.

சிலாங்கூர் முதலீட்டு துணை நிறுவனத்தின் கீழ் மணல் சுரங்க குத்தகை தொடர்பில் லட்சக்கணக்கான வெள்ளி ஊழல் விவகாரம் காரணமாக அவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!