Nov 1, 2025
Thisaigal NewsYouTube
செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியின் வீட்டில் மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மீட்பு
அரசியல்

செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியின் வீட்டில் மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மீட்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 14-

நாட்டில் செல்வாக்குமிக்க அரசியவாதி ஒருவரின் பாதுகாப்பான இல்லமாக இருந்த கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை மீட்டுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து 50 லட்சம் வெள்ளி மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனைகள் யாவும் கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும் உள்ள அந்த அரசியல்வாதியின் இரு இல்லங்களில் நடத்தப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

அண்மையில் இருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கைதானவர்களில் ஒருவர், சிலாங்கூர் மந்திரி பெசார் வாரியத்தின் முன்னாள் அதிகாரி ஆவார்.

சிலாங்கூர் முதலீட்டு துணை நிறுவனத்தின் கீழ் மணல் சுரங்க குத்தகை தொடர்பில் லட்சக்கணக்கான வெள்ளி ஊழல் விவகாரம் காரணமாக அவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!