நாட்டின் அரச பரிபாலனத்தின் அடையாளமாக விளங்குகின்ற ஆட்சியாளர்களை நிந்திக்கும் தன்மையில் வெளியிடப்படும் எந்தவொரு உரையும், அறிக்கையும், மன்னிப்பு என்ற ஒரு சொல்லின் மூலம் நிவாரணம் தேடி விட முடியாத என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சாயிட் தெரிவித்தார்.
ஆட்சியாளர்களுக்கு எதிரான நிந்தனை என்பது குற்றவியல் சட்டத்திற்கு உட்பட்டதாகும். குற்றம் இழைத்ததாக கூறப்படும் நபர்களை விசாரணை செய்வதற்கும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், உரிய தண்டனை அளிக்கப்படுவதற்கும் நடப்பு சட்டங்கள் வகை செய்வதாக அமைச்சர் அஸாலினா குறிப்பிட்டார்.
அந்த வகையில் ஆட்சியாளர்களை நிந்தித்து விட்டு, அதற்கு மன்னிப்பு கோருவது மூலம் தீர்வு காண முனைவது என்பது சட்ட ரீதியாக ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருக்க முடியாது என்று சட்ட வல்லுநருமான அஸாலினா ஓஸ்மான் தெளிவுபடுத்தினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


