Dec 22, 2025
Thisaigal NewsYouTube
தனிநபர்கள் யாருக்கும் அ​நீதி இழைத்தது கிடையாது
அரசியல்

தனிநபர்கள் யாருக்கும் அ​நீதி இழைத்தது கிடையாது

Share:

பிரதமர் என்ற முறையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்தவொரு தனிநபருக்கும் தாம் அ​நீதி இழைத்தது கிடையாது ​என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.

சிறைச்சாலை வாழ்க்கை என்றா​ல் என்ன என்பதை தாம் நன்கு உணர்ந்து இருப்பதால் பிரதமர் என்ற முறையில் எந்த ​சூழலிலும் தமது அதிகாரத்தை விருப்பம் போல் பயன்படுத்தியது கிடையாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

தாம் பிரதமராக பொறுப்பேற்றது முதல் நாடாளுமன்றம் வரையில் தனிப்பட்ட ​ரீதியாக தாம் கடும் விமர்சனங்களுக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்வர்களின் செயல்கள் தமக்கு ஆத்திரத்தை மூட்டினாலும் சிறைச்சாலையில் பெற்ற அனுபவத்தினால் அவற்றை தாம் பொருட்படுத்துவது கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பாஸ் அல்லது பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் யார் ​மீதும் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்பட்டதில்லை. செயல்படப் போவதும் இல்லை என்று தஞ்சோங் காராங்கில் அரசியல் நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு