பிரதமர் என்ற முறையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்தவொரு தனிநபருக்கும் தாம் அநீதி இழைத்தது கிடையாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
சிறைச்சாலை வாழ்க்கை என்றால் என்ன என்பதை தாம் நன்கு உணர்ந்து இருப்பதால் பிரதமர் என்ற முறையில் எந்த சூழலிலும் தமது அதிகாரத்தை விருப்பம் போல் பயன்படுத்தியது கிடையாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
தாம் பிரதமராக பொறுப்பேற்றது முதல் நாடாளுமன்றம் வரையில் தனிப்பட்ட ரீதியாக தாம் கடும் விமர்சனங்களுக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்வர்களின் செயல்கள் தமக்கு ஆத்திரத்தை மூட்டினாலும் சிறைச்சாலையில் பெற்ற அனுபவத்தினால் அவற்றை தாம் பொருட்படுத்துவது கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பாஸ் அல்லது பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் யார் மீதும் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்பட்டதில்லை. செயல்படப் போவதும் இல்லை என்று தஞ்சோங் காராங்கில் அரசியல் நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


