பிரதமர் என்ற முறையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்தவொரு தனிநபருக்கும் தாம் அநீதி இழைத்தது கிடையாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
சிறைச்சாலை வாழ்க்கை என்றால் என்ன என்பதை தாம் நன்கு உணர்ந்து இருப்பதால் பிரதமர் என்ற முறையில் எந்த சூழலிலும் தமது அதிகாரத்தை விருப்பம் போல் பயன்படுத்தியது கிடையாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
தாம் பிரதமராக பொறுப்பேற்றது முதல் நாடாளுமன்றம் வரையில் தனிப்பட்ட ரீதியாக தாம் கடும் விமர்சனங்களுக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்வர்களின் செயல்கள் தமக்கு ஆத்திரத்தை மூட்டினாலும் சிறைச்சாலையில் பெற்ற அனுபவத்தினால் அவற்றை தாம் பொருட்படுத்துவது கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பாஸ் அல்லது பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் யார் மீதும் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்பட்டதில்லை. செயல்படப் போவதும் இல்லை என்று தஞ்சோங் காராங்கில் அரசியல் நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


