பிரதமர் என்ற முறையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்தவொரு தனிநபருக்கும் தாம் அநீதி இழைத்தது கிடையாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
சிறைச்சாலை வாழ்க்கை என்றால் என்ன என்பதை தாம் நன்கு உணர்ந்து இருப்பதால் பிரதமர் என்ற முறையில் எந்த சூழலிலும் தமது அதிகாரத்தை விருப்பம் போல் பயன்படுத்தியது கிடையாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
தாம் பிரதமராக பொறுப்பேற்றது முதல் நாடாளுமன்றம் வரையில் தனிப்பட்ட ரீதியாக தாம் கடும் விமர்சனங்களுக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்வர்களின் செயல்கள் தமக்கு ஆத்திரத்தை மூட்டினாலும் சிறைச்சாலையில் பெற்ற அனுபவத்தினால் அவற்றை தாம் பொருட்படுத்துவது கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பாஸ் அல்லது பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் யார் மீதும் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்பட்டதில்லை. செயல்படப் போவதும் இல்லை என்று தஞ்சோங் காராங்கில் அரசியல் நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


