Apr 23, 2026
Thisaigal NewsYouTube
லிங்கி, கம்போங் பாரிசானின் கோழிப்பண்ணையால் துர்நாற்றம்: வீரப்பன் உடனடி நடவடிக்கை
அரசியல்

லிங்கி, கம்போங் பாரிசானின் கோழிப்பண்ணையால் துர்நாற்றம்: வீரப்பன் உடனடி நடவடிக்கை

Share:

லிங்கி, நவ. 16-


நெகிரி செம்பிலான், லிங்கி, கம்போங் பாரிசானில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையினால் ஏற்பட்டுள்ள துர்நாற்றம் குறித்து ஓரிட மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.

பொதுமக்களின் புகார் குறித்து, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணை வளாகத்தில் போர்ட்டிக்சன் நகராண்மைக்கழக அமலாக்க அதிகாரிகள் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி சோதனை மேற்கொண்டதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

லாடாங் என்.எஸ். அக்ரிகல்ச்சர் என்ற அந்த கோழிப்பண்ணை வளாகம், உரிமமின்றி, கடந்த 14 ஆண்டு காலமாக செயல்படுகிறது என்றும், போர்ட்டிக்சன் நகராண்மைக்கழகத்தின் அதிகார செயல்பாட்டுப்பகுதிக்கு அப்பாற்பட்டுள்ள பகுதியில் வீற்றிருக்கிறது என்பதும், விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில தொழில்முனைவோர், மனித வளம், பருவநிலை மாற்றம் மற்றும் பயனீட்டாளர் துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் தெரிவித்தார்.

தவிர அந்த கோழிப்பண்ணை, கிழம் கோழிகள், முட்டைகள், கோழி சாணம் முதலியவற்றை விற்பனை செய்து வருகிறது. எட்டு லட்சம் கோழிகள் வளர்க்கப்படும் அந்தப் பண்ணையில், நாள் ஒன்றுக்கு 100 கோழிகள் வீதம் இறந்து போகின்றன. அவற்றை புதைப்பதற்கு பிரத்தியேக குழி ஒன்றை கொண்டுள்ளது. துர்நாற்றம் வீசாமலும், கிருமியைக் கொல்வதற்கும் சுண்ணாம்புக்கலவையை பயன்படுத்தி வருகிறது என்று பண்ணை உரிமையாளர் விளக்கம் அளித்து இருப்பதாக வீரப்பன் சுட்டிக்காட்டினார்.

அதற்கான துர்நாற்றம் இல்லாததை பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளும் கண்டறிந்துள்ளனர். இதன் தொடர்பில் மேலும் விபரங்களை பெறுவதற்கு கடந்த நவம்பர் 11 ஆம் தேதி தாமே நேரடியாக களத்தில் இறங்கி ஆராய்ந்து, நிலைமைய கண்டறிந்ததாக வீரப்பன் தெரிவித்தார்.

பண்ணையாளருடன் நடத்தப்பட்ட சந்திப்பில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டலைப்பின்பற்றும்படி தாம் அறிவுறுத்தியதாகவும், அந்தப் பண்ணையில் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டுள்ள அந்நியத் தொழிலாளர்களின் இருப்பிட தங்கும் வசதியும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாக விரப்பன் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!