வரும் சட்டமன்றத் தேர்தலில் கெடா மாநிலத்தில் கெராக்கான் கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கெடா மாநிலத்தில் கெராக்கான் போட்டியிடக்கூடிய தொகுதிகளை இப்போதைக்கு அறிவிக்க இயலாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் Dr Doiminic Lau தெரிவித்துள்ளார்.
டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் ஓர் உறுப்புக்கட்சியாக விளங்கும் கெராக்கான், கெடா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டப்பின்னர் அது போட்டியிடக்கூடிய தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று டாக்டர் டோமினிக் குறிப்பிட்டுள்ளார்.