பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றுடன் இணைந்து அரசியல் போராட்டக்களத்திற்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது திரும்பியுள்ளார் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு தங்களுடன் இணைந்திருந்த துன் மகாதீர், அதே உத்வேகத்தில் தங்களுடன் மீண்டும் இணைந்து இருப்பது புதிய உற்சாகத்தை அளித்துள்ளது என்று ஹாடி அவாங் வர்ணித்துள்ளார்.
கடந்த வாரம் கோத்தாபாருவில் பாஸ் கட்சியின் அரசியல் நிகழ்வில் கட்சியின் அங்கியை அணிந்த நிலையில் துன் மகாதீர் உரை நிகழ்த்தியிருப்பது பழைய வரலாறு திரும்பியிருப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டார்.
கடந்த 1969 ஆம் ஆண்டு மே கலவரத்திற்கு பின்னர் சிலாங்கூர், காப்பாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஸ் கட்சி மேடையில் துன் மகாதீர் உரையாற்றியதற்காக அவர் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதாக ஹாடி அவாங் நினைவுகூர்ந்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


