பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றுடன் இணைந்து அரசியல் போராட்டக்களத்திற்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது திரும்பியுள்ளார் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு தங்களுடன் இணைந்திருந்த துன் மகாதீர், அதே உத்வேகத்தில் தங்களுடன் மீண்டும் இணைந்து இருப்பது புதிய உற்சாகத்தை அளித்துள்ளது என்று ஹாடி அவாங் வர்ணித்துள்ளார்.
கடந்த வாரம் கோத்தாபாருவில் பாஸ் கட்சியின் அரசியல் நிகழ்வில் கட்சியின் அங்கியை அணிந்த நிலையில் துன் மகாதீர் உரை நிகழ்த்தியிருப்பது பழைய வரலாறு திரும்பியிருப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டார்.
கடந்த 1969 ஆம் ஆண்டு மே கலவரத்திற்கு பின்னர் சிலாங்கூர், காப்பாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஸ் கட்சி மேடையில் துன் மகாதீர் உரையாற்றியதற்காக அவர் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதாக ஹாடி அவாங் நினைவுகூர்ந்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


