Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் மஇகா குரல் எழுப்ப வேண்டும்
அரசியல்

பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் மஇகா குரல் எழுப்ப வேண்டும்

Share:

சிரம்பான், செப்டம்பர்.06-

பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தனது உள்ளக் கிடங்கை வெளிப்படுத்துவதிலும், கருத்துகளைச் சொல்வதிலும் மஇகா மூடு மந்திரமாக இருந்து விடக்கூடாது என்று அந்தக் கூட்டணியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் இன்று அறிவுறுத்தினார்.

தனது கருத்தைத் துணிந்து சொல்வதால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்ற அச்சத்தின் காரணமாக பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்திற்கு வெளியே அறிக்கைகளை வெளியிடும் குறுக்கு வழியை மஇகா தலைமைத்துவம் கையில் எடுக்கக்கூடாது என்று முகமட் ஹசான் வலியுறுத்தினார்.

“உங்களுக்கு ஒரு கருத்து இருந்தால், அதைச் சொல்லுங்கள்… ஆனால், உங்கள் உணர்வுகளைக் கூட்டத்தில் வெளிப்படுத்தாமல் உங்களின் உள்ளக் கிடங்கிகேயே மறைத்து வைக்காதீர்கள். பாரிசான் நேஷனல் கூட்டத்தில் எதனையும் மறைக்காமல் சொல்லாமல், வெளியே பேசுவது, பாரிசான் நேஷனலின் தோழமைக் கட்சி என்ற முறையில் மஇகாவுக்கு நல்லது அல்ல என்று சிரம்பானில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அம்னோ துணைத் தலைவருமான முகமட் ஹசான் இதனை தெரிவித்தார்.

பாரிசான் நேஷனல் உச்ச மன்றக் கூட்டத்தில் சொல்ல வேண்டிய கருத்துகளை, வெளியே கூறுவதால் உறுப்புக் கட்சிகளுக்கு இடையே கட்டிக் காக்கப்பட்டு வரும் புரிந்துணைர்வு மற்றும் நல்லிணக்கம் பாதிக்கலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!