Dec 20, 2025
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவீர் : பிரதமர் கோரிக்கை
அரசியல்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவீர் : பிரதமர் கோரிக்கை

Share:

புத்ராஜெயா, டிச.2-


நாடு முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி தனியார் துறையினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், எத்தகைய துயரத்தையும், சிரமத்தையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை தனியார் துறையைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் நேரடியாக பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியும் என்று அவை சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி அல்லது பொருள் வடிவில் தனியார் நிறுவனங்கள் உதவி வழங்கலாம் என்று பிரதமர் பரிந்துரை செய்தார்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறை பணியாளர்களுடன் மாதாந்திர பேரணிக்கு தலைமையேற்று உரையாற்றிகையில் பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

சில அரசாங்க ஏஜென்சிகளும் பாதுகாப்பு படையினரும், அரசு சார்பற்ற இயக்கங்களும், தனி நபர்களும் இன , சமய பாகுபாடுயின்றி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருவதை டத்தோஸ்ரீ அன்வார் தமது ஊரையில் பாராட்டினார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்