Apr 23, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவீர் : பிரதமர் கோரிக்கை
அரசியல்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவீர் : பிரதமர் கோரிக்கை

Share:

புத்ராஜெயா, டிச.2-


நாடு முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி தனியார் துறையினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், எத்தகைய துயரத்தையும், சிரமத்தையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை தனியார் துறையைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் நேரடியாக பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியும் என்று அவை சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி அல்லது பொருள் வடிவில் தனியார் நிறுவனங்கள் உதவி வழங்கலாம் என்று பிரதமர் பரிந்துரை செய்தார்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறை பணியாளர்களுடன் மாதாந்திர பேரணிக்கு தலைமையேற்று உரையாற்றிகையில் பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

சில அரசாங்க ஏஜென்சிகளும் பாதுகாப்பு படையினரும், அரசு சார்பற்ற இயக்கங்களும், தனி நபர்களும் இன , சமய பாகுபாடுயின்றி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருவதை டத்தோஸ்ரீ அன்வார் தமது ஊரையில் பாராட்டினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!