Dec 22, 2025
Thisaigal NewsYouTube
நெங்கிரி சட்டமன்றத்தைப் போன்று, 6 நாடாளுமன்ற தொகுதிகள் காலியானதாக மக்களவை தலைவர் அறிவிக்க வேண்டும். பெர்சத்து கட்சி கோரிக்கை
அரசியல்

நெங்கிரி சட்டமன்றத்தைப் போன்று, 6 நாடாளுமன்ற தொகுதிகள் காலியானதாக மக்களவை தலைவர் அறிவிக்க வேண்டும். பெர்சத்து கட்சி கோரிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூன் 20-

கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற தொகுதி காலியானதாக, அம்மாநில சட்டமன்ற தலைவர் டத்தோ முகமது அமர் நிக் அப்துல்லா நேற்று அறிவித்திருந்ததை, மக்களவை தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல்-லும் பின்பற்ற வேண்டும் என பெர்சத்து கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பெர்சத்து கட்சியில் உறுப்பினர் தகுதியை இழந்துள்ள தங்களது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளும் காலியானதாக, அவர் அறிவிக்க வேண்டுமென, பெர்சத்து -வின் இளைஞர் பிரிவான அர்மடா தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமல் வலியுறுத்தினார்.

அந்த 6 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை, அங்குள்ள மக்களுக்கே திருப்பியளிக்க வேண்டும் என்றாரவர்.

கிளந்தான் சட்டமன்ற தலைவரின் நேற்றைய அறிவிப்பு, மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் கட்சித் தாவல் தடுப்பு சட்டம் ஏற்படுத்தி தந்துள்ள ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கின்ற வகையிலும் அமைந்துள்ளது.

6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, சிலாங்கூரில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி-க்கு ஆதரவளித்துள்ள டத்தோ அப்துல் ரஷித் ஆசாரி-யின் செலாட் கிள்ளான் சட்டமன்ற தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட வேண்டுமென வான் அஹ்மத் ஃபைஹ்சல் வலியுறுத்தினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்