Mar 7, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் பாரிசான் நேசனல் தனித்துப் போட்டியிட வேண்டும்: வீ கா சியோங் வலியுறுத்தல்
அரசியல்

மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் பாரிசான் நேசனல் தனித்துப் போட்டியிட வேண்டும்: வீ கா சியோங் வலியுறுத்தல்

Share:

கோலாலம்பூர், மார்ச்.07-

நடைபெறவுள்ள மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில், பாரிசான் நேசனல் கூட்டணி தனது சொந்த சின்னத்தின் கீழ் தனித்துப் போட்டியிட வேண்டும் என மசீச தலைவர் டத்தோ ஶ்ரீ வீ கா சியோங் வலியுறுத்தியுள்ளார்.

மசீச-வின் 77-வது ஆண்டு நிறைவு விழாவில் இன்று உரையாற்றிய அவர், இந்த இரண்டு மாநிலங்களிலும் முன்னதாக பாரிசான் நேசனல் தனித்து வெற்றி பெற்றதைச் சுட்டிக் காட்டினார். தற்போது ஜோகூர் மாநிலம் பாரிசான் நேசனல் தலைமையிலும், மலாக்கா மாநிலம் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

"வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில், பாரிசான் நேசனல் தனது சொந்தக் கொடியின் கீழ் போட்டியிட்டு, தனித்து ஆட்சி அமைப்பதற்கான ஆணையை வாக்காளர்களிடம் கோருவதே நியாயமானது மற்றும் சரியானது," என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சீன வாக்காளர்கள் இனி எந்தக் கட்சிக்கும் விசுவாசமானவர்கள் அல்ல: மசீச பொதுச்செயலாளர் கருத்து

சீன வாக்காளர்கள் இனி எந்தக் கட்சிக்கும் விசுவாசமானவர்கள் அல்ல: மசீச பொதுச்செயலாளர் கருத்து

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்