தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டுவதற்காக கெடா மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி முகமட் நூரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முதல் நாள் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை என்று போலீஸ் தரப்பு கூறியுள்ள வாதத்தை அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மறுத்துள்ளார்.
ஒரு மாநில மந்திரி பெசாரை அதிகாலை 3 மணியளவில் கைது செய்து இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும் என்று ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டார்.
போலீசாரின் கைப்பேசி அழைப்பை சனூசி புறக்கணித்து விட்டதன் காரணமாக அவரை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர் என்றும், அதிகாலை 3 மணியளவிலேயே அவரை கண்டு பிடிக்க முடிந்தது என்றும் போலீஸ் தரப்பு கூறும் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டார்.
சனூசிக்கு பாதுகாப்பு அளிக்கும் மெய்க்காவலர், அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் சனூசியுடன் போலீஸ் தொடர்பு கொள்ள இயலவில்லை, அவரை கண்டு பிடிக்க முடியவில்லை, அதனால்தான் அதிகாலை 3 மணியளவில் கைது நடவடிக்கை நடைபெற்றது என்று என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்று ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


