Mar 6, 2026
Thisaigal NewsYouTube
வெளியுறவு அமைச்சருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்படும்
அரசியல்

வெளியுறவு அமைச்சருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்படும்

Share:

கோலாலம்பூர், டிச. 18-


நண்பர்கள் சிலருடன் உணவகம் ஒன்றில் அமர்ந்திருந்த போது, சிகரெட் புகைத்துக்கொண்டு இருந்த வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானுக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் தெரிவித்துள்ளார்.

தாம் ஏற்கனவே கூறியதைப் போல சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்ற அடிப்படையில் தடை செய்யப்பட்ட பகுதியில் புகைப்பிடித்துக்கொண்டு இருந்த வெளியுறவு அமைச்சருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று டாக்டர் சுல்கிப்லி குறிப்பிட்டார்.

அதேவேளையில் அ மைச்சர் முகமட் ஹசான், அந்த உணவகத்தில் பகிரங்கமாக சிகரெட் புகைப்பதை காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள சட்ட விதிகளுக்கு ஏற்ப அபராதத் தொகையை தாம் செலுத்தவிருப்பதாக அவர் தம்மிடம் தெரிவித்துள்ளார் என்று டாக்டர் சுல்கிப்லி தெரிவித்தார்.

சிரம்பான் சுகாதார இலாகா அதற்கான அபராத நோட்டீஸை, முகமட் ஹசானிடம் சார்வு செய்யும் என்று டாக்டர் சுல்கிப்லி விளக்கினார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

வெளியுறவு அமைச்சருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்படும் | Thisaigal News