Mar 6, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு நீர் விநியோகிப்பு வாரிய இயக்குநர் பதவியிலிருந்து ஜக்டீப் சிங், நீக்கம்
அரசியல்

பினாங்கு நீர் விநியோகிப்பு வாரிய இயக்குநர் பதவியிலிருந்து ஜக்டீப் சிங், நீக்கம்

Share:

பினாங்கு, ஜன. 2-


பி.பி.ஏ. எனப்படும் பினாங்கு நீர் வினியோகிப்பு வாரியத்தின் இயக்குநர் பதவியிலிருந்து ஜக்டீப் சிங் டியோ நீக்கப்பட்டுள்ளதை பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோ உறுதிப்படுத்தியுள்ளார்.

மலேசிய பங்குச் சந்தை நிர்ணயித்துள்ள குறைந்தப்பட்ச விதிமுறைகளை நிறைவு செய்ய தவறியதற்காக இயக்குநர் பொறுப்பிலிருந்து ஜக்டீப் சிங், அகற்றப்பட்டுள்ளார் என்று சோவ் கோன் இயோ குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாரியத்தின் இயக்குநர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள், ஆண்டுக்கு ஐந்து முறை நடைபெறும் நீர் விநியோகிப்பு வாரியத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஓர் இயக்குநர் குறைந்த பட்சம் 50 விழுக்காடு வருகையை நிறைவு செய்ய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்.

மருத்துவ சிகிச்சைக்கான விடுப்பு உட்பட பல்வேறு காரணங்களினால் அந்த நிபந்தனைகளை நிறைவு செய்ய முடியாத சூழல் ஜக்டீப் சிங்கிற்கு ஏற்பட்டுள்ளதால். அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சோவ் கோன் இயோ விளக்கம் அளித்துள்ளார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை