Oct 21, 2025
Thisaigal NewsYouTube
தன்னிச்சையாக போட்டியிடுவதற்கு முடிவு
அரசியல்

தன்னிச்சையாக போட்டியிடுவதற்கு முடிவு

Share:

ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி தன்னிச்சையாக போட்டியிடவிருக்கிறது என்று அதன் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
எந்தவொரு கூட்டணியுடன் இணையாமல், மூடா கட்சி தன்னிச்சையாக போட்டிடும் என்று அக் கட்சியின் உயர்மட்டக்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக மூடா கட்சி இடம் பெற்று இருந்தாலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பாளையும், பாரிசான் நேஷனலையும் எதிர்த்து அக்கட்சி போட்டியிடவிருக்கிறது என்பதையே சையிட் சாடிக்கின் இந்த அறிவிப்பு காட்டுகிறது.
இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற மூடா கட்சியின் சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் சையிட் சாடிக் இதனை அறிவித்துள்ளார்.. ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடிய கட்சிகளின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மூடா கட்சி, திடீரென்று இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுவதையும் சையிட் சாடிக் மறுத்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பானின் ஓர் உறுப்புக்கட்சியாக இணைவதற்கு மூடா கட்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செய்துள்ள விண்ணப்பத்திற்கு இதுவரை பதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!