ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி தன்னிச்சையாக போட்டியிடவிருக்கிறது என்று அதன் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
எந்தவொரு கூட்டணியுடன் இணையாமல், மூடா கட்சி தன்னிச்சையாக போட்டிடும் என்று அக் கட்சியின் உயர்மட்டக்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக மூடா கட்சி இடம் பெற்று இருந்தாலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பாளையும், பாரிசான் நேஷனலையும் எதிர்த்து அக்கட்சி போட்டியிடவிருக்கிறது என்பதையே சையிட் சாடிக்கின் இந்த அறிவிப்பு காட்டுகிறது.
இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற மூடா கட்சியின் சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் சையிட் சாடிக் இதனை அறிவித்துள்ளார்.. ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடிய கட்சிகளின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மூடா கட்சி, திடீரென்று இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுவதையும் சையிட் சாடிக் மறுத்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பானின் ஓர் உறுப்புக்கட்சியாக இணைவதற்கு மூடா கட்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செய்துள்ள விண்ணப்பத்திற்கு இதுவரை பதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


